இயற்கையை அறிதல் – ரால்ப் வால்டோ எமர்சன்: தமிழில்-ஜெயமோகன் (நூல் அறிமுகம் – இருபத்து மூன்று) #தமிழிலக்கியம் #tamilliterarytalks #sureshpradheep #cbf2023 #சென்னைபுத்தககண்காட்சி #chennaibookfair2023 #tamilwiki #முப்பதுநாட்கள்முப்பதுநூல்கள் சென்னை புத்தகக் கண்காட்சியை முன்னிட்டு முப்பது நாட்களில் முப்பது நூல்கள் அறிமுகப்படுத்தவிருக்கிறேன். அதில் இருபத்து மூன்றாவது காணொளி. #30days30books இயற்கையை அறிதல் நூலினைப்பெற https://www.panuval.com/iyarkaiyai-arithal-10019891 ஜெயமோகன் –… Continue Reading →
15.01.2023 பதிவேற்றிய நிழலின் தனிமை நாவல் குறித்த அறிமுகக் காணொளியுடன் ‘முப்பது நாட்கள் முப்பது நூல்கள்’ வரிசையில் பதினைந்து காணொளிகள் நிறைவடைந்திருக்கின்றன. நேரம் கிடைக்கும் போது இரண்டு மூன்று காணொளிகளாக பதிவு செய்து வைக்கும்படி நண்பர்கள் பலர் கூறியிருந்தனர். நேரம் கிடைக்கவில்லை என்பதுதானே முக்கியமான பிரச்சினை! Tamil literary talks சேனல் தொடங்கியபோது நூல் அறிமுகங்கள்… Continue Reading →
விசும்பு – ஜெயமோகன் (நூல் அறிமுகம் – பதினொன்று) Visumbu – Jeyamohan #தமிழிலக்கியம் #tamilliterarytalks #sureshpradheep #cbf2023 #சென்னைபுத்தககண்காட்சி #chennaibookfair2023 #முப்பதுநாட்கள்முப்பதுநூல்கள் சென்னை புத்தகக் கண்காட்சியை முன்னிட்டு முப்பது நாட்களில் முப்பது நூல்கள் அறிமுகப்படுத்தவிருக்கிறேன். அதில் பதினொன்றாவது காணொளி. #30days30books விசும்பு நூலினை வாங்க https://www.panuval.com/visumbu-10022127 சிறுகதையின் தோற்றம் ஒரு பார்வை https://youtu.be/wYuFU2BAglw
1 பொதுவாக ஒரு முன்னோடி படைப்பாளியைப்பற்றிப் பேசும்போது அவருடைய தனித்துவமான ‘பங்களிப்பு’ என்று ஒன்றைக் குறிப்பிடுவோம். பின்னாட்களில் ஒரு படைப்பாளி நினைக்கப்படுவதே அந்தப் பங்களிப்பினால்தான். புதுமைப்பித்தன் தமிழ்ச் சிறுகதைகளின் எல்லையை விரிவுபடுத்தினார், மௌனி அகவயத் தருணங்களை மொழியில் வசப்படுத்த முயன்றார், சிறுகதை மொழியை நவீனப்படுத்தியதில் ந. பிச்சமூர்த்தியின் பங்களிப்பு அதிகம், அசோகமித்திரன் எளிய சித்தரிப்புகள் ஊடாக குறைந்த சொற்களில்… Continue Reading →
வெண்முரசு நாவல் வரிசையில் நீலம் இந்திரநீலம், இமைக்கணம் மூன்றும் மகாபாரதத்தின் மையக் கதைப்போக்கில் இருந்து வெகுவாக விலகியவை. சொல்வளர்காடு, கிராதம், மாமலர் ஆகிய நாவல்கள் பாண்டவர்களின் கான்வாழ்க்கையைப் பேசுகின்றன என்றாலும் இம்மூன்று நாவல்களையும் ஒரு வகையில் மகாபாரதத்தின் அரசியல் களத்தில் இருந்து பெரும்பாலும் விலகியவை என்று சொல்லலாம். சொல்வளர்காடு தருமனும் கிராதம் அர்ஜுனனும் மாமலர் பீமனும்… Continue Reading →
நூல் ஒன்று – முதற்கனல் என் கொள்ளுப்பாட்டியின் வழியாக நம் மரபின் சில தொன்மங்களையாவது கேட்டு வளரும் பேறு பெற்றவன் நான். நுட்பமான கதை சொல்லலும் பல திசைகளில் விரிந்து எழும் கதை நகர்வும் கொண்ட வெண்முரசின் முதல் நாவலான முதற்கனல் முதல் முறை வாசிக்கும் போது எனக்குள் பெருந்திகைப்பை ஏற்படுத்தாமல் உள்ளே அனுமதித்ததற்கு என்னுடைய … Continue Reading →
கங்கைக்ரையில் அமைந்த தொன்மையான ஷத்ரிய குலங்களை கடந்து பார்ப்பவராக அறிமுகமாகிறார் பீஷ்மர். பழம்பெருமைகளால் குலப்பூசல்களில் ஈடுபட்டிருக்கும் அதிகாரம் மிக்க ஐம்பத்தாறு ஷத்ரிய நாடுகளை முற்றாக தவிர்த்து விட்டு பாரதவர்ஷத்தின் எல்லை நிலங்களில் இருந்து அரசுகள் உருவாகி வருகின்றன. மகாபாரதத்தை மிக மிக எளிமைப்படுத்தப்பட்ட குடும்பப் பகையாகவும் அதன் மீது போடப்பட்ட தொன்மங்களின் வழியாக ஒரு… Continue Reading →
நம் ஒவ்வொருவரின் முடிவுகளின் மீதும் வரலாறு தனக்கான ஒரு முடிவினை கொண்டிருக்கும் போலும். ஆனால் வரலாறு என்பதென்ன? ஒரு சொல். அதன் மீது ஏற்றப்படும் அர்த்தங்கள் மாறிக் கொண்டே இருக்கின்றன. சிலவற்றை மறக்கிறோம். சிலவற்றை மறு கண்டுபிடிப்பு செய்கிறோம். அக்கணத்தில் வாழ்ந்து விடும் உரம் பெற்றவர்களால் சொல்லப்படும் வரலாறே வண்ணக்கடல். சூதர்களின் ஒளிமிக்க சொற்கள் வழியாக… Continue Reading →
எழுத்தாளர் ஜெயமோகன் மகாபாரதத்தை முழுமையாக மறு ஆக்கம் செய்து எழுதிய நாவல் வெண்முரசு. இருபத்தாறு தனித்தனி நாவல்களாக எழுதப்பட்டுள்ள வெண்முரசை இணைத்து ஒரே நாவலாகவும் வாசிக்க இயலும். ஜனவரி 1, 2014 முதல் வெளிவரத்தொடங்கிய வெண்முரசு ஜூலை 16, 2020ல் முடிந்திருக்கிறது. இந்த நாவல் வரிசையை www.jeyamohan.in மற்றும் www.venmurasu.in ஆகிய தளங்களில் வாசிக்கலாம். அனைத்து… Continue Reading →
© 2025 — Powered by WordPress
Theme by Anders Noren — Up ↑