Tag வெண்முரசு (நாவல்)

வெண்முரசு – சொல்வளர்காடு – துகிலுரிதலும் உடலுரிதலும்

வெண்முரசு நாவல் வரிசையில் நீலம் இந்திரநீலம், இமைக்கணம் மூன்றும் மகாபாரதத்தின் மையக் கதைப்போக்கில் இருந்து வெகுவாக விலகியவை. சொல்வளர்காடு, கிராதம், மாமலர் ஆகிய நாவல்கள் பாண்டவர்களின் கான்வாழ்க்கையைப் பேசுகின்றன என்றாலும் இம்மூன்று நாவல்களையும் ஒரு வகையில் மகாபாரதத்தின் அரசியல் களத்தில் இருந்து பெரும்பாலும் விலகியவை என்று சொல்லலாம். சொல்வளர்காடு தருமனும் கிராதம் அர்ஜுனனும் மாமலர் பீமனும்… Continue Reading →

2020ல் எழுதிய கட்டுரைகள்

2020ல் இணைய இதழ்களிலும் என் தளத்திலும் வெளியான நான் எழுதிய கட்டுரைகளின் சுட்டிகள் நீளும் எல்லைகள் – 2: கென் லியூவின் சிறுகதைகள் – நிகழ்கணத்தின் அழுத்தத்தை உணர்தல் ரா.கிரிதரனின் இசை உண்மையின் அதிகாரத்தை மறுக்கும் கலை  (யுவன் சந்திரசேகரின் ஏழு நாவல்களை முன்வைத்து) பூனாச்சி – தங்கி வாழ்தலின் துயரம் (பெருமாள் முருகனின் புனைவு)… Continue Reading →

வெண்முரசு – நூல் ஒன்று – முதற்கனல்

 நூல் ஒன்று – முதற்கனல் என் கொள்ளுப்பாட்டியின் வழியாக நம் மரபின்  சில தொன்மங்களையாவது கேட்டு வளரும்  பேறு பெற்றவன் நான். நுட்பமான  கதை சொல்லலும் பல திசைகளில் விரிந்து எழும் கதை நகர்வும் கொண்ட வெண்முரசின்  முதல் நாவலான  முதற்கனல் முதல் முறை வாசிக்கும்  போது  எனக்குள் பெருந்திகைப்பை ஏற்படுத்தாமல் உள்ளே அனுமதித்ததற்கு என்னுடைய … Continue Reading →

வெண்முரசு – நூல் இரண்டு – மழைப்பாடல்

  கங்கைக்ரையில் அமைந்த தொன்மையான  ஷத்ரிய குலங்களை கடந்து பார்ப்பவராக அறிமுகமாகிறார் பீஷ்மர். பழம்பெருமைகளால் குலப்பூசல்களில் ஈடுபட்டிருக்கும் அதிகாரம்  மிக்க  ஐம்பத்தாறு ஷத்ரிய நாடுகளை முற்றாக  தவிர்த்து விட்டு பாரதவர்ஷத்தின் எல்லை நிலங்களில்  இருந்து அரசுகள் உருவாகி வருகின்றன. மகாபாரதத்தை மிக மிக எளிமைப்படுத்தப்பட்ட குடும்பப் பகையாகவும் அதன் மீது போடப்பட்ட தொன்மங்களின் வழியாக  ஒரு… Continue Reading →

வெண்முரசு – நூல் மூன்று – வண்ணக்கடல்

நம் ஒவ்வொருவரின் முடிவுகளின் மீதும் வரலாறு தனக்கான ஒரு முடிவினை கொண்டிருக்கும் போலும். ஆனால் வரலாறு என்பதென்ன? ஒரு சொல். அதன் மீது ஏற்றப்படும் அர்த்தங்கள் மாறிக் கொண்டே இருக்கின்றன. சிலவற்றை மறக்கிறோம். சிலவற்றை மறு கண்டுபிடிப்பு செய்கிறோம். அக்கணத்தில் வாழ்ந்து விடும் உரம் பெற்றவர்களால் சொல்லப்படும் வரலாறே வண்ணக்கடல். சூதர்களின் ஒளிமிக்க சொற்கள் வழியாக… Continue Reading →

வெண்முரசு நாவல் வரிசை – அறிமுகக் குறிப்புகள்

எழுத்தாளர் ஜெயமோகன் மகாபாரதத்தை முழுமையாக மறு ஆக்கம் செய்து எழுதிய நாவல் வெண்முரசு. இருபத்தாறு தனித்தனி நாவல்களாக எழுதப்பட்டுள்ள வெண்முரசை இணைத்து ஒரே நாவலாகவும் வாசிக்க இயலும். ஜனவரி 1, 2014 முதல் வெளிவரத்தொடங்கிய வெண்முரசு ஜூலை 16, 2020ல் முடிந்திருக்கிறது. இந்த நாவல் வரிசையை www.jeyamohan.in மற்றும் www.venmurasu.in ஆகிய தளங்களில் வாசிக்கலாம்.  அனைத்து… Continue Reading →

வெண்முரசை என்ன செய்வது?

சென்ற வருட இறுதியில் நிகழ்ந்த ‘அயோத்திதாசர் பார்ப்பனர் முதல் பறையர் வரை’ நூல் வெளியீட்டு விழாவில் பேராசிரியர் டி.தருமராஜ் ‘நாம் வெண்முரசை எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறோம்?’ என்றொரு கேள்வியை முன்வைத்தார். சங்க இலக்கியத்தை, அயோத்திதாசரை என நம்மிடம் புதிதாக ‘கண்டெடுக்கப்பட்டு’ கொடுக்கப்படும் எதையுமே நமக்கு – அதாவது தமிழர்களுக்கு – முறையாக எதிர்கொள்ளத் தெரிந்திருக்கவில்லை என்பதன்… Continue Reading →

நூல் பத்து – பன்னிரு படைக்களம்

துரியோதனன் இந்திரபிரஸ்த நீர்மாளிகையில் தடுக்கி விழுந்து சிறுமை செய்யப்பட்டதாக உணர்வதில் தொடங்கி திரௌபதி துகிலுரியப்படுவது வரை நீளும் நாவல் பன்னிரு படைக்களம். வெண்முரசின் ஆறாவது நாவலான வெண்முகில் நகரம் வரை அவை எழுதி முடிக்கப்பட்ட பின்னரே நான் வாசிக்கத் தொடங்கினேன். ஆகவே முதல் வாசிப்பின் போதே அவை முழு நாவலாகவே இருந்தன. மறுவாசிப்பில் நாவலின் வடிவம்… Continue Reading →

வெண்முரசு – மறு வாசிப்பு (முதற்கனல் முதல் பிரயாகை வரை)

வெகுநாட்களாகவே மகாபாரத்தின் மிகப் பெரும்  மறு ஆக்க முயற்சியான எழுத்தாளர்  ஜெயமோகனின்  வெண்முரசை மறு வாசிப்பு  செய்ய நினைத்து தள்ளிப்போட்டுக் கொண்டே இருந்தேன். வெண்முரசு  நாவல்  வரிசையில் முதற்கனல், மழைப்பாடல், வண்ணக்கடல், நீலம், பிரயாகை, வெண்முகில் நகரம், இந்திரநீலம், காண்டீபம், வெய்யோன், பன்னிரு படைக்களம் என   பத்து நாவல்களை  ஆசிரியர்  எழுதிவிட்டார். இப்போது  அடுத்தநாவலான சொல்வளர்காடு… Continue Reading →

© 2025 — Powered by WordPress

Theme by Anders NorenUp ↑