முன்குறிப்பு 1: இந்தக் கதை என் கனவில் வந்தது. நான் கதை எழுதுவதைக் கைவிட்டு பல வருடங்களாகின்றன. முன்பெல்லாம் என் கனவில் வரும் கதையை அப்படியே எழுதிவிடுவேன். அவை பிரசுரமாகி புகழ் பெறவும் செய்தன. ஆனால் சமீப காலமாக என்னால் எழுத முடியவில்லை. அதோடு என் மொழியும் எனக்கு மறந்து கொண்டே வருகிறது. மொழியில் உள்ள… Continue Reading →
1 திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் ராமேஸ்வரநாதன் இறந்தபோது, காங்கிரஸ்காரரான அப்பாவை வெறுப்பேற்ற வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக அவரால் விக்டோரியா என்று பெயரிடப்பட்ட அவர் மகள் தஞ்சாவூர் மைக்கேல்ஸ் ஐஸ்கிரீமில் ஃப்ரூட் சாலட் ஐஸ்கிரீம் சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். நான்கரை மணியாகியும் குறையாத வெயிலை ராமேஸ்வரநாதன் உணர முடியாதவாறு அவர் அறையில் ஏசி ஓடிக் கொண்டிருந்தது. மூன்று… Continue Reading →
1 சுபத்ரா பாத்திரம் தேய்த்துக் கொண்டிருந்தாள். அப்பாவின் என்ஃபீல்டு வீட்டு வாசலுக்கு வரும் சத்தம் துல்லியமாகக் கேட்டதும் கைகளில் ஒரு மெல்லிய நடுக்கம் ஓடியது. இப்போது அவளுக்கு இருபத்திமூன்று வயது. பட்டப்படிப்பு முடிக்க முடியவில்லை. அவள் வகுப்பில் அவள் ஒருத்திதான் பட்டப்படிப்பு முடிக்காதவள். அப்பாவுக்கு அவள் பட்டம் வாங்கவில்லை என்று தெரிந்தும் அவர் எதுவும் சொல்லவில்லை…. Continue Reading →
1 அப்பா இதையெல்லாம் விரும்பி இருக்கமாட்டார். அப்பா இறக்கும்வரை தன் இந்து மத நம்பிக்கைகளைக் கைவிடவில்லை. ஆனால் அம்மா அவ்வளவு ‘கிறிஸ்துவராக’ இருந்தது இல்லை. வீட்டில் எனக்கு எதைத் தேர்ந்தெடுக்கவும் உரிமை இருந்தது. ஆனால் நான் எதையுமே தேர்வு செய்யவில்லை. என் விருப்பம் மொழியில்தான் இருந்தது. மொழியென்றால் பேச்சுமொழி, நிரல் மொழி இரண்டிலும்! அப்பாவுக்கு முன்னதில்தான்… Continue Reading →
கண்கொடுத்தவனிதம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் திருநெல்வேலியில் இருந்து வந்திருந்த ஒரு இளம் பெண் மருத்துவர் பணிபுரிந்தார். அழுக்காகவும் பரிதாபமாகவும் இருக்கும் சிறுவர்களான எங்களைப் பார்க்கும் அரசாங்க மருத்துவர்கள் எரிச்சலும் இரக்கமும் கொள்வது இயல்பு. ஆனால் இந்தப் பெண் எங்களை அருகில் அழைத்து வைத்துப் பேசினார். ‘மாத்திரை எல்லாம் ஒழுங்கா போடணும் சரியா?’ ‘தினமும் தலைக்கு ஊத்திக்கணும்… Continue Reading →
திருவாரூர் பழைய ரயில்வே ஸ்டேஷனுக்கு பக்கத்தில் ஒரு ரயில்வே மருத்துவமனை இருக்கிறது. அதற்கு எதிரே ஒரு ஆலமரம் சுற்றிக் கட்டப்பட்ட சிமெண்ட் மேடையுடன் நின்றிருக்கும். பிறந்தநாளுக்குப் பட்டுப்பாவாடை சட்டை போட்டு சீருடை அணிந்த சிறுமிகள் நடுவே உட்கார்ந்திருக்கும் குழந்தைபோல உயிரே இல்லாத நகரின் நடுவே அந்த ஆலமரம் உட்கார்ந்திருந்தது. சச்சிதானந்தம் ஒரு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில்… Continue Reading →
‘அவன எதுக்கு உள்ளாற இழுத்து உடணும்’ என்று சொன்னபடியே அம்மா என் கையைப் பற்றினாள். வாஞ்சை கூடிய பிடி. நான் அப்படியே நின்றுவிட நினைத்தேன். ஆனால் கண்ணாடியில் முகம் பார்த்தபடி சட்டை போட்டுக் கொண்டிருந்த அப்பா ‘விடுடி அவன’ என்றார். அம்மா பிடியை விடாமல் கண்ணாடிக்குள்ளிருந்த அப்பாவின் முகத்தைப் பார்த்தாள். கோபம் ஏறிய அப்பாவின் முகம்… Continue Reading →
டபுள் பஸ்ஸின் நடுவில் நானும் பார்த்திபனும் போய் நின்று கொண்டோம். பேருந்தின் இரண்டு பகுதிகளையும் இணைக்கும் கருப்புநிற ரப்பர் அசைவது எனக்குப் பிடித்திருந்தது. பார்த்திபனைப் பார்த்து சிரித்தேன். பேருந்தின் இணைப்பை சைகையால் சுட்டி ‘வெஸ்டிபியூல்’ என்றான். ‘என்னது?’ பார்த்திபனுடைய ஆங்கில உச்சரிப்பு அவ்வளவு சுத்தமானது என்பதாலேயே பெரும்பாலும் அவன் பயன்படுத்தும் வார்த்தைகளை திரும்ப கேட்டுக் கொள்வேன்…. Continue Reading →
1 “உண்மையாகவா?” “ஆமாம்” “என்னால் நம்ப முடியவில்லை. உண்மையாகவே நீங்கள் நம் தேசத்தைக் கடந்து உலகின் வேறு எந்தப் பகுதிக்கும் சென்றதில்லையா?” “இந்த குற்றத்துக்காக எனக்கு மரண தண்டனை விதிக்கப்படாது என்று நம்புகிறேன்” “விளையாடாதீர்கள்” என்று சொல்லிவிட்டு சாயமணிந்த உதடுகளைத் திறந்து பளீரென்றிருக்கும் வெண்ணிற பற்கள் தெரியும்படி விரிந்த கண்கள் சற்றே சுருங்கும்படி எங்கள் வெளியுறவுத்துறை… Continue Reading →
நான் வெளியே நின்று கொண்டிருந்தேன். வெளியே என்றால் ரொம்பவும் வெளியே. நான் நிற்கும் இடத்தில் இருந்து மகிழ்ச்சியின் மையக்கூடத்திற்குச் செல்வதற்கு இறுகி நெருங்கி நின்றிருக்கும் எண்ணற்ற மனிதர்களைக் கடக்க வேண்டியிருக்கும். ஒரு நாளோ ஒரு வருடமோ ஒரு யுகமோ கூட ஆகலாம். ஆனால் இப்போது நான் நிற்கும் இடத்தில் அவ்வளவு நெருக்கடி இல்லை. இடர்பாடுகள் இல்லை…. Continue Reading →
© 2026 — Powered by WordPress
Theme by Anders Noren — Up ↑