Category பொது

அரைக்கிணறு

15.01.2023 பதிவேற்றிய நிழலின் தனிமை நாவல் குறித்த அறிமுகக் காணொளியுடன் ‘முப்பது நாட்கள் முப்பது நூல்கள்’ வரிசையில் பதினைந்து காணொளிகள் நிறைவடைந்திருக்கின்றன. நேரம் கிடைக்கும் போது இரண்டு மூன்று காணொளிகளாக பதிவு செய்து வைக்கும்படி நண்பர்கள் பலர் கூறியிருந்தனர். நேரம் கிடைக்கவில்லை என்பதுதானே முக்கியமான பிரச்சினை! Tamil literary talks சேனல் தொடங்கியபோது நூல் அறிமுகங்கள்… Continue Reading →

மதிப்பிடுதல்

தனிமனிதர்களுக்கு அறவுணர்வு என்று ஏதும் இருப்பதாக நினைக்கிறீர்களா? உண்மையில் ஒவ்வொரு மனிதனையும் நாம் ‘தனிமனிதன்’ என்று அழைப்பது எவ்வளவு தூரத்துக்குச் சரி? உண்மையில் தனிமனிதர் என்பவர் உலகின் சிறுபான்மை இனம்தான். மற்ற அனைவரும் சராசரிகளே. இதை எழுதிக் கொண்டிருக்கும் நானும் வாசித்துக் கொண்டிருக்கும் நீங்களும் கூட சராசரியில் ஒருவராக இருக்கலாம். சராசரி என்று மனிதர்களை அடையாளப்படுத்துவதைவிட… Continue Reading →

அற்றுப்போதல்

அறையில் இரண்டு மின்விசிறிகள் ஓடிக்கொண்டிருந்தன. சுவரில் பொருத்தப்பட்டிருந்த கடிகாரத்தின் முள்துடிப்பு விட்டுவிட்டு கேட்டுக் கொண்டிருந்தது. நான் கண் விழித்தது மாடி அறை என்பதால் வாகனங்களின் எஞ்ஜின் சத்தம் மெல்லக் கேட்டது. மனம் இத்தனை சத்தங்களில் இருந்தும் ஏதோவொன்றை உருவி எடுத்துவிட்டிருந்தது. கொஞ்ச நேரம் எதற்குமே எதிர்வினை புரியவில்லை அது. சில கணங்கள்தான். மீண்டும் அத்தனை கவலைகளும்… Continue Reading →

மகிழ்தல்

மாறுதிசை மின்னோட்டம் (alternating current). பதினொன்றாம் வகுப்பில் இயற்பியல் ஆசிரியர் சொல்லக்கேட்ட இப்பதம் என் வாழ்வின் முதல் தத்துவக் குழப்பத்திற்கு காரணமாக இருந்தது. சனிக்கிழமை விடுமுறை என்றால் வெள்ளிக்கிழமை மாலை வீடு திரும்பும்போது மனதிலொரு இன்பக்கொதிப்பு இருக்குமில்லையா? காதலிக்கும் பெண் என்ன செய்தி அனுப்பி இருப்பாள் என்று எழுந்ததும் அலைபேசியைப் பார்ப்பதற்கும் இடையிலான சிலநொடிகளில் விரல்நுனிகளில்… Continue Reading →

நினைக்கப்படுதல்

குறிப்பிட்டுச் சொல்லும்படி நேற்று ஒன்றும் நடக்கவில்லை. வேலைபோய்விடுமோ, கொரோனா தொற்று வந்து நுரையீரல் பாதிக்கப்பட்டு இறந்துவிடுவோமோ, பெரிய அளவில் பண நஷ்டம் வந்துவிடுமோ என்ற வழக்கமான பயங்களைத்தவிர வேறெதுவும் இல்லாத இன்னொரு நாள். யோசித்துப் பார்த்தால் என் நாட்களின் பெரும்பகுதியை இந்த பயங்கள்தான் ஆக்கிரமித்து இருக்கின்றன. என்று தொடங்கியது இந்த பயம்? பள்ளியில் படிக்கும் போது?… Continue Reading →

உண்ணப்படுதல்

எனக்கும் வரலாற்றுக்கும் ஏதும் தொடர்பிருக்கிறதா? வரலாறு ஒரு பக்கமாகவும் நான் இன்னொரு பக்கமாகவும் நடந்து போய்கொண்டிருக்கிறோம். அது நடப்பது அரசப்பாதை. அரசனின் யானை போல கம்பீரமாக நடந்து செல்கிறது. நானோ ஒரு குறுகிய பழுதடைந்த சாலையில் அந்த யானை என்னைத் திரும்பிப் பார்க்காதா என்ற ஏக்கத்துடன் அதைப் பார்த்துக் கொண்டே நடந்து கொண்டிருக்கிறேன். வரலாற்றுக்கு அதை… Continue Reading →

ஒருதுளிக் கண்ணீர்

நம்பிக்கை தரக்கூடிய சொற்களை மட்டுமே கேட்க வேண்டும் நல்லதையே நினைக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் தொடர்ந்து இப்பதிவை வாசிக்க வேண்டாம். இது ஒரு புலம்பல் மட்டுமே. எனக்குள்ளாகவே நான் புலம்பிக் கொள்ளப் போகிறேன். அதைப் பதிந்து வைக்க வேண்டும் என்றும் நினைக்கிறேன். இந்த புலம்பலை நினைத்து எதிர்காலத்தில் (அது எவ்வளவு தூரத்தில் இருக்கிறது என்று… Continue Reading →

ஏன் இலக்கியம்?

ஏன் இலக்கியம் வாசிக்கிறீங்க?இலக்கியம் இல்லாமல் மக்கள் வாழ்ந்துகொண்டுதானே இருக்கிறாரகள்.அரசு நடந்து கொண்டுதானே்இருக்கறது. அறிவியல் அறிஞர்கள் கண்டுபடிப்புகளை நிகழ்த்தி கொண்டுதானே இருக்கிறார்கள்.போர் நடந்து கொண்டுதானே இருக்கிறது.வண்புணர்வு நடந்து கொண்டு தானே இருக்கறது.அணு ஆயுத பதட்டம் இருந்து கொண்டதானே இருக்கறது.மக்கள் பசியில் இருந்து கொண்டுதானே இருக்கிறார்கள்.இவற்றுக்கெல்லாம் இலக்கியம் எந்த வகையில் தேவை.உலகம் இருக்க இருக்க பண்பாட்டு ரீதியாக,உறவு ரீதியாக,சுற்றுசூழல்… Continue Reading →

போர்முரசு

பன்னிரெண்டாம் வகுப்பு படித்த போது வேதியியலில் எப்படியும் தேரமாட்டேன் என்ற அசைக்கமுடியாத நம்பிக்கை இருந்ததனால் கமலாயக் கரையில் இருக்கும் வினாயகா டியூஷன் சென்டரில் சேர்ந்தேன். டியூஷன் ஆசிரியர் செந்தில்குமார் வேதியியல் நன்றாக சொல்லிக் கொடுப்பார். சிக்கல் என்னவெனில் காலையில் ஆறு மணிக்கு டியூஷன் தொடங்கும். என் வீட்டிலிருந்து டியூஷன் சென்டர் பதினாறு கிலோமீட்டர். முதல் சில… Continue Reading →

தர்மபுரியில் இரு தினங்கள் – வாசிப்பும் பண்பாடும்

அவதார் படத்தில் இரண்டு கால்களும் செயல்படாத நிலையில் இருக்கும் நாயகனை வேற்றுகிரக வாசியான அவதாரின் உடலில் செலுத்துவார்கள்(பல அறிவியல் விளக்கங்கள் தரப்படும் இந்த “செலுத்துதலை” கூடுவிட்டு கூடுபாய்தல் என்று வைத்துக் கொள்ளலாம). அவதாரின் உடலுக்குள் நம் நாயகன் சென்றதும் முதலில் தன் கால்களைத் தான் கவனிப்பான். கால்களை அசைக்க முடிவதும் நடக்க முடிவதும் அவனுக்கு பெரும்… Continue Reading →

« Older posts Newer posts »

© 2026 — Powered by WordPress

Theme by Anders NorenUp ↑