அன்புள்ள சுரேஷ் பிரதீப் அவர்களுக்கு, நாவல் வாசித்த பின்னர் ‘ஒளிர்நிழல்’ பற்றிய பிறர் கருத்துக்களை பார்த்தேன். அதில் ரஞ்சனி பாசு அவர்கள் எழுதிய கருத்துக்களும் என் அவதானிப்புகளும் சற்றே ஒத்திருந்தது. அதனால் அதில் சொல்லப்பட்டதை தவிர்த்து வேறு சில கருத்துகளை எழுத விழைகிறேன். புயலிலே ஒரு தோணியில் ஆவன்னா என்ற ஒரு அத்தியாயமுண்டு. அதில் அந்த… Continue Reading →
இது ஒரு எளிய வாசிப்பில் இருந்து எழும் விவரிப்பு.. ஒளிர்நிழல் என்ற பெயரை ஜெயமோகன் இணையதளத்தில் அறிந்திருந்தேன். சிரத்தை எடுத்து அது குறித்து தெரிந்து கொள்ளவில்லை. அழிசி கட்டுரைப்போட்டி, நடுவர்களின் பெயரை தெரிந்து கொண்ட போது, இப்பெயரை எங்கோ பார்த்திருக்கிறோமே என்று நினைவின் அடுக்குகளில் தேடி, திரும்ப ஜெயமோகனிடம் சரணடைந்தேன்.. அப்பொழுது தான் ஈர்ப்பு பற்றிய… Continue Reading →
(ஒளிர்நிழல் நாவலுக்கு மதிப்புரை, எம்.கோபாலகிருஷ்ணன், காலச்சுவடு இதழ், ஜூன் 2018) எதையேனும் சார்ந்திருகவித்துவம், தத்துவம்காதல், சங்கீதம்,இங்கிதம்… இப்படிஎதன் மீதேனும் சாய்ந்திருஇல்லையேல்உலகம் காணாமல் போய்விடும். – வண்ணநிலவன் வாசகனை முதல் வரியிலிருந்தே தன்னுள் அனுமதிக்காத தீர்மானத்தையும் இறுக்கத்தையும் கொண்டுள்ளது சுரேஷ் பிரதீப்பின் ‘ஒளிர் நிழல்’ நாவல். எந்த நொடியிலும் வாசகன் நாவலில் தன்னை மறந்து ஒன்றிவிடக்கூடாது என்ற… Continue Reading →
ஒரு செயலும் செய்யாமல் கண்முன்னே கரைந்துகொண்டிருந்த ஒரு முழு நாளின் நுனியில் மனதைச் சமன் செய்ய நண்பனிடம் இருந்து வாங்கி வந்திருந்த ‘ஒளிர்நிழல்’ நாவலை வாசித்தேன். நாவலின் செறிவான மொழியும், அதனுடைய மீபுனைவு எனப்படும் Meta-fiction வடிவம் மற்றும் சொல்லும் முறை என பல வகைகளில் இந்நாவல் நல்ல வாசிப்பனுபவத்தை தந்தது. நாவலின் பல இடங்களில்… Continue Reading →
அன்புள்ள சுரேஷ் பிரதீப் அவர்களுக்கு வணக்கம் ஒளிர் நிழல் படித்து முடித்தவுடன் மிகவும் சீண்டப்பட்டவனாகவே உணர்ந்தேன் – சரியான காரணம் எதுவும் இன்றி ஒரு கொந்தளிப்பான மனநிலையை அடைந்தேன் – சற்று சுதாரித்து iஒரு விதமாய் என் எண்ணங்களை தொகுத்து இந்த மின்னஞ்சல் எழுதத் தொடங்குகிறேன், இம்மின்னஞ்சலை தங்கள் நாவல் குறித்த விமர்சனமாகவும் , நாவல்… Continue Reading →
மணிமாறன் அன்பு பிரதீப் ஒளிர்நிழல் வாசித்தேன். . நாவலின் வடிவத்தை கட்டமைத்திருக்கக்கூடியத் திறன் திகைக்கவைக்கிறது. உங்களது அனுபவ அவதானிப்பிற்குட்பட்ட ஒரு வாழ்க்கைச் சித்திரத்தை உங்கள் வயதளவிற்கான அத்தியாயங்களாகப் பிரித்து தேர்ந்த கவனத்தோடு முன் பின்னாக கலைத்தடுக்கி ஒரிலக்கிய வாசகனுக்கே சாத்தியப்பாடுள்ள ஒரு நுண்சரடால் அதுவும் சற்றும் தொய்வில்லாத மொழி நடையில் கோர்த்திணைத்து முன்வைத்திருப்பது அபாரம். … Continue Reading →
“ஒளிர் நிழல்” அளவில் சிறிய நாவல், எனினும் அடர்த்தியானது. சுரேஷ் சகவயதில் இருக்கும் எழுத்தாளர். இது இவரது முதல் நாவல். மிகத்தீவிரமான வாசிப்பிலும் இலக்கிய இயங்கு தளத்திலும் இருப்பவர். இவரது மனிதர்களின் உணர்வுகள் மீதான பார்வை என்பது சமகாலத்தில், சகவயதில் உள்ளவர்களாலோ அல்லது அதற்குச் சற்று மேலே உள்ள எழுத்தாளர்களாலோ இத்தனை நுட்பமாக எழுதப்படவில்லை என்றே… Continue Reading →
தனிப்பட்ட முறையில் எனக்கும் முகநூலிலும் ஒளிர்நிழல் நாவல் குறித்து வந்த எதிர்வினைகள் மற்றும் விமர்சனங்களை தொகுத்துள்ளேன். நாவல் குறித்த பார்வையை பகிர்ந்து கொண்ட எழுத்தாளர்களுக்கும் வாசகர்களுக்கும் நன்றி. அனிதா வணக்கம். சற்று முன்பு உங்கள் ஒளிர் நிழல் நாவலை நிறைவு செய்தேன். வெகு சிறப்பாக இருந்தது என்ற ஒற்றை வரி நிச்சயமாக போதாது. வாசகர் சொல்ல… Continue Reading →
(சுரேஷ் பிரதீப்புடன் ஒரு நேர்முகம் – நரோபா, பதாகை இதழ், நவம்பர் 2017) கேள்வி: உங்களைப் பற்றிச் சில தகவல்கள் – .படிப்பு/ பூர்வீகம்/ வேலை/ குடும்பம் இப்படி… சுரேஷ் பிரதீப்: திருச்சியில் பொறியியல் பயின்ற நான்கு வருடங்கள் நீங்கலாக என் சொந்த ஊரான தக்களூருக்கு அருகில் உள்ள கிராமமான விடையபுரத்தில் அப்பா அம்மா மற்றும் அண்ணனுடன்… Continue Reading →
(பதாகை இதழ் கட்டுரை) சுரேஷ் பிரதீப் தொண்ணூறுகளில் பிறந்தவர். எழுபதுகளிலும், எண்பதுகளின் முற்பாதியிலும் பிறந்து எழுத வந்தவர்களின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் சற்றே குறைந்து, எழுத்துலகில் சிறு சுணக்கம் இருந்ததாக தோன்றியது. எண்பதுகளின் பிற்பாதியிலும், தொண்ணூறுகளிலும் பிறந்து எழுதுபவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்திருக்கிறது. உலகமயமாக்கல், இணையம் எளிதாக உலகின் கலைச் செல்வங்களை கொண்டு சேர்க்கிறது. ரசனையை இளமையிலேயே… Continue Reading →
© 2026 — Powered by WordPress
Theme by Anders Noren — Up ↑